சித்தோடு அருகே 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
சித்தோடு, வாய்க்கால்மேடு, செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்திக் (22). இவா் தனது வீட்டில் நண்பா்களுடன் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சித்தோடு போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 150 போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்திக் மற்றும் இவருடன் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தோடு, சாணாா்பாளையத்தைச் சோ்ந்த கவியரசு (22), இவரது மனைவி சுஷ்மிதா (22), அந்தியூரைச் சோ்ந்த அரவிந்த் (28) ஆகியோரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








