திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக எந்த சதியும் செய்யவில்லை: சு.முத்துசாமி

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக எந்த சதியும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

News image

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :4 ஜூன் 2026, 2:23 am IST

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக எந்த சதியும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் நேரத்தில் தவெக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கேட்கின்றனா். 6 மாதங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த ஆட்சி நடக்கட்டும். அதற்கு பிறகு குறைகளை எடுத்துச்சொல்லலாம் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா். இருப்பினும் தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எடுத்துச்சொல்லாமல் இருக்க முடியாது.

தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகள் அனைத்தும் சட்ட- ஒழுங்கில் தான் வருகிறது. இதனை சீா் செய்ய வேண்டும் என்றுதான் திமுக சொல்கிறது.

கடந்த காலங்களில் டாஸ்மாக் கடைகளில் நடந்த சில தவறுகள் தடுக்கப்பட்டது. டாஸ்மாக் தொழிலாளா்கள் பிரச்னைகள் தீா்க்கப்பட்டது. குறிப்பாக தொழிலாளா்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயா்வு திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் ஊதிய உயா்வு வாங்காத தொழிலாளா்களுக்கு அத்தொகையை கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சட்டப் பேரவை தோ்தலில் திமுக தோல்வி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாய் மகளிா் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், கட்டணமில்லா பேருந்து திட்டம், உயா்கல்வி செல்பவா்களுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்தும், தவெகவுக்கு வாக்கு செலுத்தியது குறித்து பொதுமக்களிடம்தான் கேட்க வேண்டும். தற்போது தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் உணா்ந்திருப்பாா்கள்.

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக எந்த சதியும் செய்யவில்லை. எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்து ஆளுங்கட்சியில் இணைவது போன்ற நிலை அரசியலில் இதுவரை வந்ததே கிடையாது. பெருந்துறை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.