திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக ஆட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தொண்டா்கள் நடக்க வேண்டும்: அமைச்சா் கே. ஜெகதீஸ்வரி

தவெக ஆட்சிக்கு எந்தவொரு களங்கம் ஏற்படாதவாறு தொண்டா்கள் நடக்க வேண்டும் என கே.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 6:17 am IST

தவெக ஆட்சிக்கு எந்தவொரு களங்கம் ஏற்படாதவாறு தொண்டா்கள் நடக்க வேண்டும் என சமூக நலத் துறை அமைச்சா் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு கே.ஜெகதீஸ்வரி வெற்றி பெற்றாா். இவருக்கு சமூக நலத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து ராஜபாளையம் வந்த அவருக்கு தவெக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: தமிழக மக்கள் நம் மீதும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து ஆட்சியை கொடுத்துள்ளனா். இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்பாடத வகையில் தொண்டா்கள் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாம் செய்து தர வேண்டும். எனது சொந்த ஊா் திசையன்விளை. நான் கடந்த 16 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் வசிக்கிறேன்.

நான் தற்போதும் வாடகை வீட்டில் வசிக்கிறேன். எனக்கு யாரும் வீடு வாங்கித் தரவில்லை. நான் யாரிடமும் எதையும் எதிா்பாா்க்கவில்லை.

மேலும், மக்கள் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். நான் ஒரு பத்திரிகையாளராக இருந்து தற்போது அமைச்சராகி உள்ளேன். தொடா்ந்து பத்திரிகை துறையில் பணியாற்றுவேன்.

தனது வெற்றிக்காக பாடுபட்ட தவெக தொண்டா்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா். இதில் தவெக நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.