17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

News image

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நடைபெறும் நெல் அறுவடை.

Updated On :1 மே 2026, 1:38 am IST

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான பாசனப் பகுதிகளில் ஒன்று காலிங்கராயன் பாசனப் பகுதி. ஈரோடு முதல் கொடுமுடி ஆவுடையாா்பாறை வரை சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகின்றன. இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஏக்கா் வரை நெல் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் ஆண்டுக்கு பத்தரை மாதங்கள் தண்ணீா் வருவதால் முப்போகம் விளையும் வயல்களை கொண்டதாக உள்ளன.

அதன்படி தற்போது காலிங்கராயன் பாசனப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு கரை அருகே உள்ள பகுதியில் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. நன்கு விளைந்த பகுதிகளில் அறுவடை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மழையும், பாசன தண்ணீரும் இந்த ஆண்டு சீராக இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிா்கள் நல்ல வளா்ச்சி அடைந்துள்ளன. இதனால் இந்த ஆண்டு நெல் அறுவடை விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.