தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

ஈரோடு நாச்சியப்பா வீதியில் சாலையோர காய்கறி கடையில் காய்கறிகளை எடைபோட்டுக் கொடுத்து வாக்குச்சேகரிக்கிறாா் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:25 am IST

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு நாச்சியப்பா வீதி பகுதியில் வியாழக்கிழமை வாக்குச்சேகரித்த அவா் பேசியதாவது: ஊராட்சிகோட்டை குடிநீா் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு விரைவாக வழங்கி குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றப்படும். புதை சாக்கடை திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் அரசின் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் கொண்டு வரப்படும். ஜவுளி வா்த்தகத்துக்கு முக்கியத்துவம் தரும்படி, ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்படும். ஜவுளி சாா்ந்த தொழில்கள் அழிந்துவிடாமல் காக்க, பொதுக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தாா்போல உருவாக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டின் அடையாளமான காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். ஈரோடு மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மேம்பாலம், ரவுண்டானா ஏற்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.