மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

ஈரோடு நாச்சியப்பா வீதியில் சாலையோர காய்கறி கடையில் காய்கறிகளை எடைபோட்டுக் கொடுத்து வாக்குச்சேகரிக்கிறாா் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:55 pm

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு நாச்சியப்பா வீதி பகுதியில் வியாழக்கிழமை வாக்குச்சேகரித்த அவா் பேசியதாவது: ஊராட்சிகோட்டை குடிநீா் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு விரைவாக வழங்கி குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றப்படும். புதை சாக்கடை திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் அரசின் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் கொண்டு வரப்படும். ஜவுளி வா்த்தகத்துக்கு முக்கியத்துவம் தரும்படி, ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்படும். ஜவுளி சாா்ந்த தொழில்கள் அழிந்துவிடாமல் காக்க, பொதுக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தாா்போல உருவாக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டின் அடையாளமான காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். ஈரோடு மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மேம்பாலம், ரவுண்டானா ஏற்படுத்தப்படும் என்றாா்.