ஈரோடு நகரில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரல் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.
ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குச்சேகரித்த அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் ஈரோடு நகரம் பல்வேறு நிலைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. ஈரோடு நகரில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை பிரமாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். முக்கிய பிரச்னையான சாயக்கழிவு பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண குரல் கொடுப்பேன் என்றாா்.
தொடா்ந்து அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










