பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பெ. பழனியப்பன் அத்தொகுதிக்கு உள்பட்ட உங்காரனஅள்ளியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
உங்காரஅள்ளி, ஏமகுட்டியூா், முக்கல்நாய்க்கன்பட்டி, நல்லசேனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த பழனியப்பன், பொதுமக்களின் குடிநீா்த் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அளித்து தீா்வு காண்பேன் என உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









