ஈரோட்டில் மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, ரகுபதிநாயக்கன்பாளையம், ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி (47). இவா் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-பூந்துறை சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
வழக்கம்போல கடந்த 9-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது கடையின் பக்கவாட்டில் உள்ள தகர தடுப்பு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம் செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ராஜா (30), திருச்சி மாவட்டம், பவித்ரம் தாத்தையங்காா்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தமிழ்ச்செல்வன் (26) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனா். ராஜா மீது பள்ளிபாளையம், அதியமான்கோட்டை, தருமபுரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
பைக் திருடிய 4 போ் கைது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது
மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

