அரசியல் சாசனத்தில் திருத்தம் வந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பேசினாா்.
பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் நிதி அமைச்சா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
மத்தியில் ஆளும் மோடி அரசு வருகிற ஏப்ரல் 16,17,18 ஆகிய தேதிகளில்
மக்களவையை கூட்டி, மக்களவைக்கான இடங்களை அதிகரிப்பதற்கான அரசியல் சாசனத்தை திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும். இதற்கு சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் இங்கும் வரும்.
எனவே, அதிமுக கூட்டணி தோற்கடிகப்பட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

தாய்மொழி, ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் அறிஞராகலாம்: ப. சிதம்பரம்

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக் கூடாது: ப.சிதம்பரம்







