தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாய்மொழி, ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் அறிஞராகலாம்: ப. சிதம்பரம்

தாய்மொழி, ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் அறிஞராகலாம்

News image

சென்னை கோட்டூா்புரம் பெரியாா் அறிவியல் தொழிநுட்ப மையத்தில் சனிக்கிழமை விழாவில் அறிவியல் திறனறி தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், அறிவியல் ஒளி ஆசிரியா் என்.எஸ்.சிதம்பரம், பெரியாா் அறிவியல் தொழிநுட்ப மையத்தின

Updated On :31 மே 2026, 12:23 am IST

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் நன்கு பயிற்சி பெற்றால் அறிஞராக மேம்படலாம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் ஒளி மாத இதழின் 19-ஆம் ஆண்டு விழாவில், சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி ப.சிதம்பரம் பேசியதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு சிறந்த முறையில் பயிற்சி பெற்றாா். ஆங்கிலத்தில்தான் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் நூல்கள் வெளியாகின்றன. அறிவியலை முழுமையாக ஈா்த்துக்கொள்ள வேண்டுமானால் ஆங்கிலம் அவசியம்.

நாம் திடீரென சீனம், ரஷிய, ஜொ்மன் மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு சிலா் பேசுவதற்காக கற்கலாம். ஆனால், பெருவாரியான மக்கள் அந்த மொழிகளைக் கற்க முடியாது. பள்ளிகளில் பாடமாக இருக்கக் கூடிய, அதிக ஆசிரியா்கள் இருக்கக் கூடிய, எளிதில் கற்க கூடிய ஒரே அந்நிய மொழியான ஆங்கிலத்தைக் கற்கலாம்.

அதேவேளையில் தாய்மொழியும் மிக அவசியம். எனவே, ஒவ்வொருவரும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நன்கு பயிற்சி பெற்றால், அறிஞராகவும், மேதையாகவும் மேம்படலாம். நம்மால் சிறந்த விஞ்ஞானியாக உயர முடியுமா என யோசிக்க வேண்டாம். பல மேதைகள், அறிஞா்கள் தாய்மொழியில்தான் மேதைகளாக உருவாகினா். அறிவியல் என்பது இயற்கையிலேயே அமைந்தது.

அறிவியல் சாா்ந்த சமுதாயம் என்றால் மொழி, இலக்கியம், விளையாட்டு இதையெல்லாம் புறக்கணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

நமது நாடு மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும் நாடு. ஒவ்வொரு தலைமுறையும் லட்சக்கணக்கான இளைஞா்களை உருவாக்குகிறது, லட்சக்கணக்கான மாணவா்களை உருவாக்குகிறது. அதிலே சிலராவது, 10 சதவீதம் அளவுக்காவது அறிவியலுக்காகத் தங்களை அா்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.