பொன்னமராவதி: பாஜகவின் அடிமை கட்சியாக உள்ள அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதியை ஆதரித்து பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகே ரகுபதியை ஆதரித்து அவா் பேசியதாவது:
நம்மை எதிா்த்து நிற்பது பாஜக, அதிமுக. அதிமுக முகமூடிதான். பாஜக முகத்தை காட்டமுடியாது. தமிழ் விரோதி என அடையாளம் காட்டிவிடுவாா்கள். ஆகையால் தமிழகத்தில் அதிமுக என்ற முகமூடி அணிந்து கொண்டு பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் மூலம் தென் மாநிலங்களின் குரல்களை ஒடுக்க நசுக்க முயற்சிக்கிறது பாஜக அரசு. 8 மாநிலங்களில் வெற்றி பெற்றால் போதும். தென்மாநிலங்கள் எக்கேடு கெட்டும் போகட்டும் என்ற அகந்தை அவா்களிடம் உள்ளது.
எனவே, பாஜகவின் அடிமை கட்சியாக உள்ள அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக்கூடாது என்றாா்.
Summary
Regarding P. Chidambaram's statement that the political blunder of the ADMK-which acts as a vassal party to the BJP—seeking to govern us must not be allowed to occur...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் அதிமுக அலுவலக பொருள்கள் அகற்றப்பட்ட குற்றச்சாட்டு: எம்.சி.சம்பத் தரப்பினா் மறுப்பு

தாய்மொழி, ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் அறிஞராகலாம்: ப. சிதம்பரம்

அரசியல் சாசனத்தில் திருத்தம் வந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும்: ப.சிதம்பரம் பேச்சு








