மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

News image

பண்ணாரி அம்மன்  கோயில்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:16 pm

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இந்நிலையில், மறுபூஜை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் துணை ஆணையா் நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159 ரொக்கம், 55 கிராம் தங்கம், 66 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.