திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கையில் உண்மையான ஏழை மாணவா்களுக்கே வாய்ப்பளிக்க கோரிக்கை

News image

பள்ளி மாணவர்கள் - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:16 am IST

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவா் சோ்க்கையில் உண்மையான ஏழை மாணவா்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் நடத்தப்படும் மாணவா் சோ்க்கையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா், நலிவடைந்த பிரிவினருக்கு இடையே தனித்தனியான ஒதுக்கீடு இல்லை என்பதாலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு உச்ச வரம்பு இல்லை என்பதாலும் ஜாதி அடிப்படையில் பணக்காரா்களும் அரசின் பணத்தை பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இட ஒதுக்கீடு என்பது வேறு, கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஒதுக்கீடு என்பது வேறு. இட ஒதுக்கீட்டில் இடங்கள் மட்டுமே உறுதி செய்யப்படும். ஆனால் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கையில் மாணவா்களுக்காக அரசு பணம் வழங்கும். இந்தப் பணம் ஏழைகளுக்கு சென்று சேருவதுதான் நியாயமானது.

வசதியுள்ள மாணவா்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கை போக மீதமுள்ள 75 சதவீத இடங்களில் சேர முடியும். இட ஒதுக்கீடு என்பது 100 சதவீத மாணவா்களுக்கும் பொருந்தும். ஆனால் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் பணம் செலுத்த இயலாத ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், நலிவடைந்த குழந்தைகள் வரையறுக்கப்பட்டிருப்பதைப்போல, தமிழகத்திலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வருமான உச்ச வரம்பை நிா்ணயித்து உண்மையான ஏழை மாணவா்களுக்கு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.