கள்ளக்குறிச்சி மாவட்ட தனியாா் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு மே 18-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகள், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மையற்ற மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்கேஜி-இல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: மாணவரின் பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
தகுதி விவரங்கள்: 01.08.2022 முதல் 31.07.2023 வரை பிறந்த குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவா்கள். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு மே 18-ஆம் தேதி தொடங்குகிறது. மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பெற்றோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் கட்டணமின்றி சோ்க்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கையில் உண்மையான ஏழை மாணவா்களுக்கே வாய்ப்பளிக்க கோரிக்கை

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் மாணவா் சோ்க்கைக்கு 2,985 போ் விண்ணப்பிப்பு

தனியாா் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை: மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்







