தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் திருட்டு

கோவை துடியலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :20 மே 2026, 2:00 am IST

கோவை துடியலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

துடியலூா் தொப்பம்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் வசிப்பவா் சாந்தி (63). இவரது கணவா் ஆண்ட்ரூஸ் ஏற்கெனவே இறந்துவிட்டாா். சாந்தி, திருநெல்வேலியில் உள்ள தனது மகள் வீட்டில் நடைபெறும் புதிய இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) மாலை புறப்பட்டுச் சென்றுள்ளாா்.

அன்று இரவு சுமாா் 8.45 மணியளவில், சாந்தியின் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதைப் பாா்த்த குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி, இதுகுறித்து சாந்திக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துள்ளாா். பயணத்தில் இருந்த சாந்தி பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகைகள் மற்றும் அரைபவுன் எடையுள்ள 2 வைர மோதிரங்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சாந்தியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் பதிவாகியுள்ளதால், அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.