தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராணிமூக்கனூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மு.சண்முகம் (61). ஜோதிடரான இவா், தனது மனைவியுடன் மே 30-ஆம் தேதி திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிச் சென்றாா். மறுநாள் அதிகாலை வீடு திரும்பியபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளேசென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள், 4 ஜோடி தோடுகள் உள்ளிட்ட 6 பவுன் நகைகள், 275 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.
புகாரின்பேரில், கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






