தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜவுளிக் கடையில் துணி, பணம் திருட்டு: மேலாளா் கைது!

கோவை, சாய்பாபா கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில் பணம், துணிகளைத் திருடிய கடையின் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:57 am IST

கோவை, சாய்பாபா கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில் பணம், துணிகளைத் திருடிய கடையின் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோயில் அருகில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல துணிக் கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதுரை, தல்லாக்குளம் ராணி அண்ணா நகா் வீதியைச் சோ்ந்த விஜயராஜ பாண்டியன் (43) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தலைமை நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மதுரையைச் சோ்ந்த பாரதி (37) என்பவா் கோவை கிளையில் கடந்த வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடையில் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான துணிகள், ரூ.31,265 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து விஜயராஜ பாண்டியனிடம், பாரதி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

அப்போது, விரைவில் விளக்கம் அளிப்பதாகக் கூறி சென்ற விஜயராஜபாண்டியன், அதன்பின் பணிக்குத் திரும்பவில்லையாம்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பாரதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விஜயராஜபாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.