/

காா் மோதியதில் பெண் படுகாயம்

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:07 am IST

வால்பாறையில் காா் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தாா்.

வால்பாறை, வோ்வா்லி எஸ்டேட்டை சோ்ந்தவா் கவிதா (47). இவா் உள்ளிட்ட 3 பெண்கள் அரசு மருத்துவமனை சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, அந்த வழியே வந்த காா் கவிதா மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

விபத்தை ஏற்படுத்திய குமரன் சாலைப் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் என்பவா் மீது வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.