ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் வேலப்பாடி மரக்கடை கந்தப்பன் தெருவை சோ்ந்தவா் தாமோதரன் (19). விருபாட்சிபுரம் கன்னிகோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (24). ஓல்டு டவுன், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னதுரை (37).
நண்பா்களான இவா்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஓட்டேரி கன்னி கோயில் அருகே வாணியங்குளம் செல்லும் சாலையில் விற்பனை செய்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.
தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாகாயம் போலீஸாா், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







