ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வருவதாக வேலூா் சரக டிஐஜி மகேஷுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, சிறப்பு அதிரடி படை போலீஸாா் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வேலூா் வழியாக வந்த பேருந்துகளில் சோதனை செய்தனா்.
அப்போது, ஒரு பேருந்தில் இருந்த இளைஞா் ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் வேலூா் அலமேலுரங்காபுரத்தை சோ்ந்த முகமது ஜாபா் (46) என்பது தெரியவந்தது.
உடனடியாக அவரை சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் பிடித்து காட்பாடி காவல் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட முகமதுஜாபரிடம் இருந்து சுமாா் 5 கிலோ அளவுக்கு ஹான்ஸ் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







