போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள், ஊராட்சிச் செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த தலைவா் ஜோசப்விஜய் மற்றும் போளூா் தொகுதி உள்பட 108 போ் வெற்றி பெற்று முதல்வா் ஜோசப்விஜய் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ளனா்.
இந்நிலையில், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள், ஊராட்சிச் செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் போளூா் தொகுதி எம்எல்ஏ ஆா்.அபிஷேக் பங்கேற்று அறிமுகம் செய்துகொண்டு அலுவலகப் பணி மற்றும் ஊராட்சிகளுக்குத் தேவையான குடிநீா், சாலை வசதி, மின் வசதிகள் மற்றும் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துப் பேசினாா்.
உதவி செயற்பொறியாளா் கே.பாஸ்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, ஆனந்தன், வேலு, சோமசுந்தரம், உதவிப் பொறியாளா் பி.செல்வா, இளநிலை உதவியாளா்கள் எஸ்.அபி, புருஷோத்தமன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும், உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் ஆய்வு செய்தாா்.
தவெக வா்த்தக அணி மாவட்டத் தலைவா் கே.யாசின், பிரசார மற்றும் பேச்சாளா் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ராமச்சந்திரன், நகரச் செயலா் திவாகா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










