திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நலப் பணியாளா்கள் மற்றும் ஊக்குநா்களுக்கு நடைபெற்ற இந்த திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாமுக்கு
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, ஆனந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ராணி, மாவட்ட மேலாண்மை அலகு சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாணி வரவேற்றாா்.
பயிற்சி முகாமை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோசப்கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.
முகாமில் பயிற்சியாளரும், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளருமான காந்திமதி பேசுகையில், போளூா் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில் 4 வகையான கலரில் சேமிக்கும் கலன்கள் வழங்கப்படும். இந்த கலன்களில் ஈரக்கழிவுகள், உலா் கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், சிறப்பு கவனக் கழிவு என தனித்தனியாக கழிவுகளைப் பெற்று பாதுகாப்பாக ஊருக்கு வெளியே சேகரிக்கவேண்டும்.
மேலும் பொதுவெளியில் வீசவோ, எரிக்கவே, புதைக்கவோ கூடாது. பாதுகாப்பாக பிரித்தெடுக்கவேண்டும். கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.
40 ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் நலப் பணியாளா்கள், ஊக்குநா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










