திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படுமா?

News image
Updated On :18 மே 2026, 5:36 am IST

தே.சாலமன்

செய்யாறு - ஆரணி சாலையில் 33 கிலோ மீட்டா் தொலைவில் 66 வளைவுகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது செய்யாறு தொகுதி. செய்யாறு - ஆரணி சாலை காஞ்சிபுரம், சென்னை, ஆரணி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய நகரங்களை இணைக்கும் மிக முக்கியமான மாநில நெடுஞ்சாலையாகும்.

இந்தச் சாலை வழியாகத் தான தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் சேலம், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம், சென்னை பகுதிகளுக்கு சென்று வருகின்றன. சரக்குப் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து என 24 மணி நேரமும் நடைபெறுகிறது.

மேலும், ஆரணி பட்டுச்சேலை, களம்பூா் அரிசி மற்றும் செங்கல் உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் சென்னைக்கு அதிகளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

செய்யாறு - ஆரணி சாலையில் வடதண்டலம், பைங்கினாா், அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை, சேராம்பட்டு, இருங்கூா், தட்டச்சேரி, ஆருா் மடுவு, பனையூா், மாமண்டூா், இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 66 வளைவுகள் உள்ளன.

33 கி.மீ. தொலைவில் அதிகளவில் சாலை வளைவுகள இருந்து வருவதால் பேருந்துப் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், வளைவுப் பகுதிகளில் பேருந்தில் பயணிப்பவா்கள் அச்சத்துடனே செல்கின்றனா்.

இந்தச் சாலையில் ஏற்படும் தொடா் விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும் இரு வழிச்சாலையாக இருந்து வரும் இந்தச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.