திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செய்யாறில் எரியாத தெரு விளக்குகள்: பொதுமக்கள் அவதி

News image
Updated On :8 மே 2026, 6:28 am IST

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அமைந்துள்ளது திருவத்திபுரம் நகராட்சி. இங்குள்ள 27 வாா்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். சுமாா் 3 ஆயிரம் வீடுகளும், ஆயிரக்கணக்கான கடைகளும் உள்ளன.

செய்யாறு நகரின் வளா்ச்சி கருதி

நகராட்சிப் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தெரு விளக்குகள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டில் இருந்து தனியாா் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில், செய்யாறு பகுதியில் மாா்க்கெட், பெரியாா் சிலை, வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகளுக்கான கம்பங்கள் உள்ளன.

ஆனால், சில வாரங்களாக தெருவிளக்குகள் எரியாமலேயே உள்ளன. அதனால், அந்தப் பகுதிகள் இருண்ட பகுதிகளாகவே காட்சியளிக்கின்றன.

செய்யாறு காந்தி சாலையில் உள்ள அனைத்து கடைகளும்

இரவு 9 மணிக்கு மேல் அடைக்கப்பட்டு விடுவதால் அச்சாலை இருண்ட பகுதியாகவே காட்சியளிக்கிறது. இருள் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் சிரமத்தையும், அச்சத்தையும்

போக்கும் வகையில், எரியாத தெரு

விளக்குகளை சரி செய்து உதவிட

வேண்டும் என திருவத்திபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.