போளூா் வட்டம், மட்டபிறையூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஊஞ்சல் தாலாட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மட்டபிறையூா் ஊராட்சியில் ஏரிக்கரை எதிரே பழைமையான ஸ்ரீபொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சிறப்பு பூஜை செய்து சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. பின்னா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்திப் பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கோயில் தா்மகா்த்தா வேலுமணி, செயலா் மனோகரன், கோபி, காயத்ரி மற்றும் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










