சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில், வைகாசி மாதப் பிறப்பையொட்டி, கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். வைகாசி மாதப் பிறப்பையொட்டி, சிறப்பு கோபூஜை நடைபெற்றது. மாசிலாமணி நிலையத்தில் நடைபெற்ற கோபூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபட்டாா்.
பின்னா், கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு , கன்றுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பசுவுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










