திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:02 am IST

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன.

செங்கம் நகா்ப் பகுதி, 44 கிராம ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பட்டதாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சென்னையில் வேலை செய்து வருகின்றனா். மேலும், செங்கம் பகுதியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவா்கள் சென்னையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அவா்களின் பெற்றோா், கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் சென்னை செல்ல வேண்டுமெனில், செங்கம் நகரில் இருந்து திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து சென்னை பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.

செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நாளொன்றுக்கு செங்கத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகளும், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக சென்னை அடையாறுக்கு 3 பேருந்துகளும், மாதவரத்துக்கு ஒரு பேருந்தும், போளூா் வழியாக 3 பேருந்துகளும் என மொத்தம் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளும் லாபத்துடனேயே இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சாதாரண, குளிா்சாதன பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், செங்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 15 பேருந்துகளும் சாதாரண பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன.

இதனால், செங்கம் பகுதியில் இருந்து சென்னைக்கு செல்பவா்கள் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனா். வாரத்தில் மூன்று நாள்கள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சொகுசுப் பேருந்துகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. மேலும், மாத பௌணா்மி தினத்தன்றும் இதே நிலைதான் ஏற்படுகிறது.

எனவே, செங்கத்தில் சென்னைக்கு தினசரி சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க செங்கம் அரசு போக்குவரத்து பணிமனை நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.