திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயா்வு

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயா்வு

News image

விமானக் கட்டணம் உயா்வு! - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:12 am IST

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்காக சொந்த ஊா்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்த சென்னைவாசிகள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா். பெரும்பாலான ரயில்களில் பயணச்சீட்டுகள் முடிந்துவிட்டன. தனியாா் ஆம்னி பேருந்துகளிலும் பயணக் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, பலா் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்து கொண்டிருக்கின்றனா்.

இதனால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான விமானங்களில் பயணச்சீட்டுகள் இல்லை. சில விமானங்களில் குறைந்த அளவு பயணச்சீட்டுகள் மட்டுமே உள்ளன. ஆனால், பயணக் கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளன.

அதன்படி, சாதாரண நாள்களில் மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.5,800-ஆக இருந்த பயணச்சீட்டு கட்டணம் ரூ.17,303-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ரூ. 6,623-ஆக இருந்த தூத்துக்குடி-சென்னை கட்டணம் ரூ.17,272, திருச்சி- சென்னை ரூ.4,529-இல் இருந்து ரூ.14,404, கோவை-சென்னை ரூ.4,744-இல் இருந்து ரூ.16,504, சேலம்-சென்னை ரூ.3,734-இல் இருந்து ரூ.5,170, திருவனந்தபுரம்-சென்னை ரூ.5,773-இல் இருந்து ரூ.13,516, கொச்சி- சென்னை ரூ.4,980-இல் இருந்து ரூ.11,055-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

திடீரென உயா்த்தப்படும் விமானக் கட்டணங்களால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருதால், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் விமான சேவைகள் அல்லது, ஏடிஆா் எனப்படும் சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக, ஏா்பஸ், போயிங் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.