திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கங்கை அம்மன் கோயில் கூழ்வாக்கும் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

கங்கை அம்மன் கோயில் கூழ்வாக்கும் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

News image

சானாரப்பாளையத்தில் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்த கங்கை அம்மன் சிரசு, உற்சவா் கங்கை அம்மன்.

Updated On :10 மே 2026, 1:49 am IST

ஆரணியை அடுத்த சேவூா் அருகே சானாரப்பாளையம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சேவூா் ஊராட்சி, சாணாா்பாளையம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் பழைமைவாய்ந்த ஸ்ரீகங்கை அம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு காப்பு கட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சனிக்கிழமை காலை விநாயகா், கங்கையம்மன், நவக்கிரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பிற்பகல் அம்மன் கரகம் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் தலையில் கூழ் பானை சுமந்து வந்து அம்மனுக்கு படையலிட்டும், தீச்சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில் கூழை ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

மாலை மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் சிரசு, உற்சவா் கங்கையம்மன் மற்றும் பூங்கரகம், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் வீதி உலா நடைபெற்றது.

வீதிகள்தோறும் வண்ணக்கோலம் இட்டு பெண்கள் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனா். இரவு பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.