மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :22 மார்ச் 2026, 8:05 pm

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் 2-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

மேலும் மகா சங்கல்பமும், மகா பூா்ணாஹுதி நடைபெற்று, மேளதாள ஊா்வலத்துடன் புனிதநீா் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியா்களால் யாக சாலையிலிருந்து எடுத்து வரப்பட்டன.

இதனைத் தொடா்ந்து வேதமந்திரங்கள் கூறி கோயில் கோபுரங்களுக்கு புனிதநீா் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியா்கள் நடத்திவைத்தனா். மேலும் பரிவார மூா்த்திகள், விநாயகா் சிலைகளுக்கு புனித நீா் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் உள்ளூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.