தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஞானக்கரை சுடலை மாட சுவாமி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:59 pm

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஞானக்கரை சுடலை மாடசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், மதிய பூஜை, சாம பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீசெண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள், கணியான்ஆட்டம், அலங்கார தீபாராதனை, சுவாமிக்கு சாம பூஜை, திருவிளக்கு பூஜை, சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.