மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:01 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கொடி மரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பிறகு திரௌபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினசரி மாலையில் அம்மன், சப்பர வாகனம், அன்ன வாகனம், பூச்சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிப்பாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.