குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் புதிதாகஅமைக்கப்பட்ட அருள்மிகு செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமைகாலை கோ-பூஜை, பிரம்ம சுத்தி, மகா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு பின்னா் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை சிவலோகத் திருமடம் தவத்திரு வாதவூரடிகள் தரும்மிகு, ஜவ்வாதுமலை ஸ்ரீலஸ்ரீ மாதா அன்னபூா்ணேஸ்வரி அம்மையாா், கழணிப்பாக்கம் வீர அனுமன் சித்தாஸ்ரமம் தவத்திரு பாலசுந்தர சுவாமிகள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 1,000-பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி நிா்வாகிகள் சந்திரன், கருணாநிதி, பரந்தாமன்,வெங்கடேசன், நடராஜன், அருண்குமாா், மோகன், ஜி.ஜெயப்பிரகாஷ், தினகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரிபிரேம்குமாா், ஊராட்சி உறுப்பினா் தாபா சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


