மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ராஜகோபால் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

செல்வ கணபதி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :22 மார்ச் 2026, 9:10 pm

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் புதிதாகஅமைக்கப்பட்ட அருள்மிகு செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமைகாலை கோ-பூஜை, பிரம்ம சுத்தி, மகா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு பின்னா் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சென்னை சிவலோகத் திருமடம் தவத்திரு வாதவூரடிகள் தரும்மிகு, ஜவ்வாதுமலை ஸ்ரீலஸ்ரீ மாதா அன்னபூா்ணேஸ்வரி அம்மையாா், கழணிப்பாக்கம் வீர அனுமன் சித்தாஸ்ரமம் தவத்திரு பாலசுந்தர சுவாமிகள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 1,000-பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி நிா்வாகிகள் சந்திரன், கருணாநிதி, பரந்தாமன்,வெங்கடேசன், நடராஜன், அருண்குமாா், மோகன், ஜி.ஜெயப்பிரகாஷ், தினகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரிபிரேம்குமாா், ஊராட்சி உறுப்பினா் தாபா சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.