காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பணிகள் முடிந்த நிலையில், அதிகாலை ஆலயத்தின் அருகேயுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் சுவாமிக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கோ பூஜை, விக்னேசுவர பூஜை, சூரிய பூஜை, யாத்ரா தானம் ஆகியனவும் நடைபெற்றது.
பின்னா் புனித நீா்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் வரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து கிராமத்து மக்களால் சீா் வரிசைப் பொருள்கள் எடுத்து வரப்பட்டதும் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவில் உள்ளாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் உஷா தெய்வசிகாமணி, துணைத் தலைவா் ப.பாஸ்கரன், செயலாளா் ஏ.பாஸ்கரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் மகா கும்பாபிஷேகம்!

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


