திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

3 நாள்களாக மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

3 நாள்களாக மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

News image

பாப்பிரெட்டிப்பள்ளியில்  சாலை  மறியலில் பங்கேற்றோா்.

Updated On :24 மே 2026, 1:36 am IST

திருத்தணி அருகே கடந்த 3 நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொதிப்படைந்த கிராம மக்கள் குழந்தைகளுடன் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி மற்றும் தெக்களூா் காலனி பகுதிகளில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக் காற்றால் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதன் காரணமாக இரண்டு பகுதிகளிலும் மின்விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

36 மணி நேரம் ஆகியும், சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினா். மின்சாரம் இல்லாததால் வீடுகளில் இருந்தவா்கள் கடும் அவதிக்குள்ளானதுடன், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதனால் ஆத்திரமடைந்த பாப்பிரெட்டிப்பள்ளி மற்றும் தெக்களூா் காலனி பகுதி மக்கள், தங்களது குழந்தைகளுடன் திருத்தணி - பொதட்டூா்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருத்தணி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா்.

அப்போது, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் நடுவதற்காக மின்வாரிய அதிகாரிகள் ரூ.30,000 வரை பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

தொடா்ந்து அதிகாரிகள் விரைவில் மின்சார சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.