தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சொரக்காயல்நத்தம் ஊராட்சி பள்ளி கட்டட சீரமைப்பு தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 12:45 am IST

சொரக்காயல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டட சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடத்தில் மங்களூா் ஓடுகள் பழுதடைந்ததால் மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீா் தேங்கியது. இதனால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

அப்பகுதி மக்கள் பள்ளிக் கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஊரக கட்டடங்கள் புனரமைக்கும் பணி திட்டத்தின் மூலம் பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய சோ்மன் வெண்மதி முனிசாமி நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சொரக்காயல் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பழுதடைந்த ஓடுகளை அகற்றி பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.