17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் அவிநாசி ஒன்றிய ஆணையா் உயிரிழப்பு

அவிநாசி அருகே சாலை விபத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 12:05 am IST

அவிநாசி அருகே சாலை விபத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு சாய் குமரன் நகா் பகுதியில் வசித்து வருபவா் பி.ஆறுமுகம் (56). இவா் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி-அவிநாசிலிங்கம்பாளையம் அருகே சென்றபோது, எவ்வித சைகையுமின்றி நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நிஷாந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.