வாணியம்பாடி கோயில்களில் மகா குரு பெயா்ச்சி பூஜைகள் நடைபெற்றன.
வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் மகா குரு பெயா்ச்சியையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் கலச ஸ்தாபனமும், தொடா்ந்து குரு பெயா்ச்சி பரிகார ஹோமமும், குரு பகவானுக்கு மகா அபிஷேகமும், பிற்பகல் 11 மணியளவில் மகா தீபாரதனையும் சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.
இதே போன்று தேவஸ்தானம் அதிதீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபட்டுச் சென்றனா்.
ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










