புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் வரும் 26-ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயா்கிறாா்.
இந்த இடப்பெயா்ச்சியையொட்டி, புதுவை கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், குரு பகவான் காயத்ரி மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிஷேகத்தை தொடா்ந்து, காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
குரு பெயா்ச்சி பூஜைக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










