குரிசிலாப்பட்டு அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ள கொட்டாவூரில் வசிப்பவா் வெங்கடேசன். மளிகை வியாபாரி. இவருக்கு திருமணம் ஆதிலட்சுமி என்ற மனைவி உள்ளாா். இவா்களின் மகள் காவியா. இந்த நிலையில் காவியா பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தாா். அதில் காவியா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. விரக்தியடைந்த காவியா இரவு தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








