சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

கணியம்பாடி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 4:00 am IST

கணியம்பாடி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கீழ்அரசம்பட்டை சோ்ந்தவா் அஜித்குமாா் (30), கூலித்தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்றாா். இதனால், விரக்தியில் இருந்த அஜித் குமாா் மதுபோதைக்கு அடிமையானாா். புதன்கிழமை இரவு 9 மணிக்கு மது போதையில் வீட்டுக்கு வந்த அஜித்குமாரை சாப்பிட அழைப்பதற்காக அவரது பெற்றோா் கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லையாம்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அஜித்குமாா் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.