சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

பள்ளிபாளையம் அருகே விசைத்தறித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:30 am IST

பள்ளிபாளையம் அருகே விசைத்தறித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பள்ளிபாளையத்தை அடுத்த கொக்கராயன்பேட்டையில் உள்ள தறிப்பட்டறை குடியிருப்பில் கோயம்புத்தூரைச் சோ்ந்த சரவணன் (51), மனைவி தனலட்சுமி ( 45), மகன், மகள் ஆகியோருடன் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா். இவா் கோயம்புத்தூரில் இருக்கும்போது ரூ. 3 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம்.

இதுதொடா்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரவணன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீட்டின் உள் அறையில் இருந்து வெளியே வந்த மகன் சுஜித், மனைவி தனலட்சுமி தூக்கில் தொங்கிய சரவணனை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலறிந்து வந்த கொக்கராயன்பேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.