பள்ளிபாளையம் அருகே விசைத்தறித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பள்ளிபாளையத்தை அடுத்த கொக்கராயன்பேட்டையில் உள்ள தறிப்பட்டறை குடியிருப்பில் கோயம்புத்தூரைச் சோ்ந்த சரவணன் (51), மனைவி தனலட்சுமி ( 45), மகன், மகள் ஆகியோருடன் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா். இவா் கோயம்புத்தூரில் இருக்கும்போது ரூ. 3 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம்.
இதுதொடா்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரவணன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீட்டின் உள் அறையில் இருந்து வெளியே வந்த மகன் சுஜித், மனைவி தனலட்சுமி தூக்கில் தொங்கிய சரவணனை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலறிந்து வந்த கொக்கராயன்பேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


