10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காவியா 498 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளாா். அதே பள்ளி மாணவிகள் எல்.ஜீவிதா, கே.லத்திகா ஆகியோா் 495 மதிப்பெண்களும், ஜெ.திலகவதி, எஸ்.தேஜஸ்வினி ஆகியோா் 492 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்ரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், தலைமை ஆசிரியா் எஸ். பழனி ஆகியோா் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி மாணவா்களைப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பழனி அரசினா் மகளிா் பள்ளி மாணவி 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம்







