மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கள்ளக்குறிச்சிஅரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.கலைச்செல்விக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :12 மே 2026, 12:23 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி மற்றும் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சிஅரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செ.கலைச்செல்வி பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா், மேலும், கரடிசித்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி, எலவனாசூா்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.குமாரமங்கலம் மாதிரி மேல்நிலைப் பள்ளி, வேலூா் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கொட்டப்புத்தூா் அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிஆகிய 8 அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

இதையடுத்து திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாணவி கலைச்செல்வி மற்றும் 8 அரசுப்

பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டி கேடயங்கள் வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.