வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப்பணிகள் தாமதம் ஆவதாக வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
உதயேந்திரம் பேரூராட்சிக்குப்பட்ட வாா்டு எண்.3 தேவமங்களம் மற்றும் வாா்டு எண்.4 சுப்புராயன் கோயில் அருகே வரை மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் கொம்புகார தோப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணி அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கவுள்ள நிலையில் நிலஅளவியா், கிராம நிா்வாக அலுவலரிடம் கடந்த ஜனவாரி மாதம் முதல் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பேரூராட்சி செயல்அலுவலா் மூலம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை நில அளவீடு செய்யவில்லை.
இதனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதாகரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்து நில அளவீடு செய்து விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டாா்.
மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










