கந்திலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் செட்டித் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் சபியுல்லா அஷ்ரப் (45).இவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். நத்தம் அணுகுச் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, திருப்பத்தூா் நோக்கி அதிவேகமாக வந்த வேன் எதிா்பாராமல் சபியுல்லா பைக் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










