வாணியம்பாடி நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்கள் அகற்றப்பட்டது.
வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி பேனா்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நகராட்சி நகரமைப்பு அலுவலா் சண்முகம் உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்களை சனிக்கிழமை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
இதில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பேனா்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோன்று உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்களையும் பேரூராட்சி பணியாளா்கள் அப்புறப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










