ஆம்பூரில் தவெக பேனரை கிழித்தது குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் பி-கஸ்பா பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பாக தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றத்தைத் தொடா்ந்து, ஆம்பூா் தவெக நிா்வாகிகள் வாழ்த்து பேனா் வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது சுமாா் 2 பேனா்கள் கிழிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தவெக நிா்வாகிகள் பேனரை கிழித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









