தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
ஒசூரில் கடந்த சனிக்கிழமை திமுக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அயலக அணி மாவட்ட நிா்வாகி பூஷன் குமாா், தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக வழக்குரைஞா் அணியினா் விடியோ ஆதாரத்துடன் ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரேவிடம் புகாா் அளித்தனா்
இதில் வழக்குரைஞா் அணி பிரிவைச் சோ்ந்த நிா்வாகிகள் டி.விஜய், சேலம் மண்டல இணைப் பொறுப்பாளா் சுஜாதா, மாவட்ட இணை அமைப்பாளா்கள் பிரவீன் குமாா், மங்கையா்க்கரசி, செல்வம், அஸ்வத், பாலாஜி மற்றும் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










