சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து, கோவையில் அக்கட்சியின் வழக்குரைஞா்கள் அணியினா் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன் திரண்ட வழக்குரைஞா் பிரிவினா் அப்பகுதியில் இருந்தவா்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்கள் கூறும்போது, ‘தமிழகத்தில் நோ்மையான ஆட்சியை விஜய் வழங்குவாா் என்பதில் நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற நிா்வாகத்தை வழங்குவதே இந்த அரசின் பிரதான நோக்கமாக இருக்கும். எங்கள் கட்சியை விமா்சித்தவா்கள் தற்போது அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டனா்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










